Committed to Environment Awareness,Womens Empowerment,Rural Upliftment,Income Generating Activity & lively Hood activities...communication # 15/2 South Mada Street, Thiruvanmiyur,Chennai 600041, Call : +919025767 252,+919092358252

Tuesday, April 20, 2010

Tree Plantation


மரக்கன்றுகள் நடுவோம் வாங்க!


3 மீட்டரிலிருந்து 4 மீட்டர் இடைவெளி தூரத்தில் 1 அடி விட்டம் 2 அடி ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். எடுத்த மண் குழிக்குள் சரியா வண்ணம் சற்றுத் தள்ளிப் போட வேண்டும்.
அந்த மண் சில நாட்களுக்கு அப்படியே வெளியில் இருக்கட்டும். அதில் உள்ள கற்களையும், கூழாங்கற்களையும் நீக்கி அதோடு 3-ல் 1 பங்கு மக்கிய சாணிஉரம் சேர்க்க வேண்டும்.

மரக்கன்று நடும் நாள்:
பருவ மழைக்காலத்தில் மழை பெய்யும் ஒரு நாளையோ அல்லது மேகமூட்டமான ஒரு நாளையோ தேர்ந்தெடுத்து முதல் மழைக்குப் பிறகு நடவு செய்வது நல்லது.

சரியாக நடுதல் எப்படி?
நாற்றுப் பண்ணைகளில் இருந்து நாற்றைக் கொண்டுவந்து சேகரிக்க வேண்டும். அப்போது நாற்றுக்களைக் கவனமாக கையாள வேண்டும்.
* தண்டைப் பிடித்து தூக்காமல் பையின் அடிப்பாகத்தைப் பிடித்து தூக்குவது நன்று.
* நட வேண்டிய இடத்துக்கு நாற்றுக்களை கொண்டு வந்த பிறகு நேரத்தை வீணாக்க வேண்டாம்.
* வெளியில் இருக்கும் மண்ணில் சிறிதளவு குழிக்குள் தள்ள வேண்டும்.
* வேர்களை சுற்றியிருக்கும் மண்பிடிப்பு உதிர்ந்து விடாமல் பாலிதின் பைகளைக் கிழித்தோ அல்லது மண் தொட்டிகளை உடைத்தோ குழியில் வைக்க வேண்டும்.
* மீதமுள்ள மண்ணைக் குழிக்குள் போட்டுத் தள்ளி வேரைச் சுற்றி மண்ணை இறக்கவும். இதனால் நாற்று வளையாமல் நேராக நிமர்ந்து வளரும். மழைத் தண்ணீரும் அதிகம் தேங்காது.
* தண்ணீர் விடத்தோதாக கன்றைச் சுற்றி பள்ளம் இருந்தால் நன்று. சரிவான பகுதி எனில் மழை நீர் சேகரிப்பு குழிகளை பிறை வடிவில் கன்றுக்கு முன்பும் பின்பும் ஏற்படுத்தலாம்.
கவனம்:
* ஈர மண்ணில் செடியின் வேர்கள் அழுந்திப் பொருந்தியிருக்க வேண்டும்.
* ஈர மண்ணில் இருந்து வேர்கள் வெளியே தெரிந்தாலும், வேரைச் சுற்றியிருக்கும் மண் உதிர்ந்தாலும் கன்றுகள் காய்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.
* நாற்றை அதிக ஆழத்தில் வைத்து நட்டாலும் அது காய்ந்து கருகி விடும் என்பது ஞாபகமிருக்கட்டும். வேர்கள் வெளியே தெரியும்பிட நீட்டிக் கொண்டிருந்தால் அந்த நாற்றுக்கள் வளராது.
* வேர்கள் மடங்கி இருக்கும் வகையில் நட்டு விட்டால் நாற்று வாடி உயிரிழந்து விடும்.
* வளைந்த நாற்றுக்கள் நேராக வளராது.
* முதல் கோடை காலத்தில் நாற்றுக்கு தினமும் தண்ணீர் விட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகம்.
* நடப்பட்ட கன்றுகள் பாதுகாக்கப் பட வேண்டும். அதிக அளவில் பொது இடத்தில் மரக்கன்றுகளை வளர்க்க முற்படும்போது முடிந்தால் காவலர் ஒருவரை போட்டு கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும்
.
கடற்கரையோரம் மரம் நடும் முறை:
* செம்மண்/களிமண், வண்டல், எரு கொண்டு கலவை தயார் செய்ய வேண்டும்.
* மூடாக்கு செய்ய தென்னை நார்க் கழிவு, இலை தழைகளைச் சேகரிக்க வேண்டும்.
* 1.5 அடி X 1.5 அடி அளவு குழி எடுக்க வேண்டும்.
* அதில் பாதியில் தயாராயுள்ள கலவை மண்ணைப் போட்டு நட வேண்டும்.
* நட்ட பின் உப்பங்காற்றிலிருந்து கன்றுகளைக் காப்பாற்ற கிழக்கு மேற்காக இருபுறமும் பனை ஓலை வைக்க வேண்டும்.
ஆடு, மாடு மேய்ச்சலில் இருந்து காக்க உள்ளூரிலேயே கிடைக்கும் குச்சி கோல்களைச் செடியைச் சுற்றிலும் சொறுகி வேலி உருவாக்க வேண்டும்.
கடற்கரையோரம் செடிகளைக் காப் பாற்ற இரண்டு ஆண்டுகளுக்காவது தண்ணீர் விட வேண்டும்.
நாற்று நன்றாக வளரும்போது கண்ணுக்கு எத்தனை அழகாய் காட்சி தருகிறது. இன்றைய மரக்கன்று நாளைய மரம் நாட்டின் வளம். மரங்களை குழந்தைகளைப் போல் வளர்ப் போம்

No comments:

Post a Comment